More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
Feb 16
டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!

 இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



இந்திய பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் வெளிநாட்டவர் இதில் தலையிட வேண்டாம் என்று சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், அக்‌ஷய்குமார், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் குரல் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் அழுத்தத்தால்தான் இவ்வாறு குரல் கொடுத்து வந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்தன.



விவசாயிகள் எப்படி போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும், போராட்டத்திற்கு எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த டூல்கிட்டினை சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் ஷேர் செய்டிருந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரேட்ட தன்பெர்க்கின் பதிவினை அகற்றினர்.



அந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பவர்களை பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோதுதான், பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவி திஷாரவி சிக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளரான திஷா ரவியை கைது செய்து, சிறையிலும் அடைத்துவிட்டனர்.



திஷா ரவியின் கைதுக்கு ராகுல்காந்தி, ப.சிதம்பரம், அரவிந்த் கெஜ்ரிவால், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



ஆனால், பாகிஸ்தானின் ஆளுங்கட்சி திஷாரவிக்கு ஆதரவுதெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘’மோடி ஆட்சி, தங்கள் அரசுக்கு எதிரான அனைத்து குரல்களையும் மவுனமாக்குகின்றது’’ என்றும், ‘’கிரிக்கெட் வீரர்களையும், சினிமா பிரபலங்களையும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவது வெட்கக்கேடாது’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்திருக்கிறது.



பாகிஸ்தான் பிரதமரின்கட்சி தெரிவித்திருப்பதால் இது சர்வதே சதிதானா? என்ற கோணத்தில் சலசலப்புஏற்பட்டிருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Mar09

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ

Jan29


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா

Sep06

இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்

Oct25

உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Jun04

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ

Mar06

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட

Nov21

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர

May24

பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Aug31