More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!
ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!
Feb 26
ரத யாத்திரை மறுப்பு: மாநகர காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு!

ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெறுகிறது. ராமர் கோவில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடம் எங்கள் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோவிலுக்கு நிதி வசூலிக்க ரத யாத்திரை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.



போலீஸார் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி விசாரித்து நிபந்தனைகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மார்ச் 1ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06


மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

May02

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட

Mar10

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க

Jun11

 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

Oct02

உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல

Jun18