More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்
Mar 08
மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இலங்கை பதிவு செய்திருந்த வகையில் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.



இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.



தற்போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.



மீதமுள்ள தடுப்பூசிகள் தற்போது சுகாதார தரப்பின் வசம் உள்ளதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



இந்தநிலையில் இரண்டாவது முறையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.



சில சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுமாயின் அதே தயாரிப்பை வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



எவ்வாறாயினும் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாகவும் இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கும் காலம் வரும் போது தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்குமென நம்புவதாகவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Jul10

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ

Oct21

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர

Feb01

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய

Aug29

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன

Jun07

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற

Mar29

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்

Mar22

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு

Feb19

இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச

Jun12

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

Oct05

போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச

Aug31

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர