More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு
தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு
Mar 04
தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் - மத்திய சுகாதார மந்திரி அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரையில், 3 லட்சத்து 12 ஆயிரத்து 188 அமர்வுகளில், 1 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



67 லட்சத்து 42 ஆயிரத்து 187 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 27 லட்சத்து 13 ஆயிரத்து 144 சுகாதார பணியாளர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.



இதே போன்று 55 லட்சத்து 70 ஆயிரத்து 230 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 834 முன்கள பணயாளர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும், நாள்பட்ட நோயுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 896 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 5 லட்சத்து 22 ஆயிரத்து 458 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இனி நேரம் ஒரு தடையாக இருக்காது.



பொதுமக்கள் தங்கள் வசதிப்படி வாரத்தின் எந்த ஒரு நாளிலும் 24 மணி நேரமும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் நேற்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.



தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.



இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பொதுமக்கள் தங்கள் வசதிப்படி எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோடி ஆரோக்கியத்தையும், நாட்டு மக்களின் நேரத்தையும் மதிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.



மேலும் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பதற்காக நேர தடையை அரசு நீக்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக

Aug07

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ

Jan30

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய

Apr26

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற

Jun21

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட

Jul15

கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ

Aug27

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Oct15

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

Dec27

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு

Apr19

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த

Feb19

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி

Feb19

ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த