More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் – ஜீவன்
 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் – ஜீவன்
Mar 19
ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் – ஜீவன்

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் 15 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) மாலை ஹற்றன்- டிக்கோயா வனராஜா பகுதியில் பிரஜாசக்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டார்.



அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் தற்போது நிறைவேற்றி வருகின்றோம்.



நாம் பதவிக்கு வந்து ஒரு வருடம்கூட நிறைவடையவில்லை. இருப்பினும் பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபாய் போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



அடுத்ததாக வேலையிண்மை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



ஒரிருவருக்கு வேலை வழங்குவது என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்ல. தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.



இதேவேளை ஆயிரம் ரூபாய் தொடர்பாக பேசுகின்றனர். ஆயிரம் மாத்திரம் எமது இலக்கு அல்ல. எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனைய நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே பாடுபடுகின்றோம்.



கூட்டு ஒப்பந்தம் சரியில்லை என்றனர். தற்போது ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்கின்றனர்.



ஊடகங்கள் முன்னால் உரையாடியே சிலர் அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றனர். இவர்களின் இரட்டை வேடம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்

Oct07

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந

Jan29

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

Apr02

மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

Jul14

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்

Aug23

பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி

Jan30

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன

Mar23

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல

Sep23

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத

Mar31

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ

Aug29

எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர

Feb02

இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த

Apr16

வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை