More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி
Mar 20
காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி போன்ற முக்கிய மந்திரிகள் என ஏராளமான தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் ஐக்கியமாகினர். அவர்களில் பலர் பா.ஜனதாவில் தற்போது போட்டியிட சீட்டும் பெற்றிருக்கிறார்கள்.



இவ்வாறு நந்திகிராம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்கி இருக்கும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, பர்மா மேதினிபூரில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது தனது கட்சியில் இருந்து விலகியவர்களை துரோகிகள் என அவர் வர்ணித்தார்.



இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது. இந்த துரோகிகள் தற்போது பா.ஜனதாவின் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள். இது அந்த கட்சியிலேயே காலம் காலமாக உழைத்து வரும் விசுவாசிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்போது வீட்டில் இருந்தே அழுது புலம்புகிறார்கள்.



கடந்த காலங்களில் நான் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தலை, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்திலும் காயம் ஏற்பட்டு இருக்கின்றன. எனது கால்கள் மட்டும் தப்பியிருந்தன. ஆனால் தற்போது அவர்கள் என் காலை குறிவைத்திருக்கிறார்கள். நான் பிரசாரங்களில் பங்கேற்று விடக்கூடாது என்பதற்காக காலில் தாக்கினர். ஆனால் நான் ஒரு தெரு போராளி. என்னை அவர்களால் வீழ்த்த முடியாது.



இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி

Aug15

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்

Jul18

மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Jun09

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த

May07

தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில

Apr01

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ

Apr10

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Mar15

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக

May26

சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம

May17

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்

Feb23

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த

Aug07

ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற

May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப