More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன
Mar 24
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கை - பந்துல குணவர்தன

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



உலகில் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.



நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற  சுங்கக்  கட்டளைச் சட்டம் மீதான விவாத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,



2018, 2019ஆம் ஆண்டுகளில் எல்லையற்ற அரச வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வரிக் கொள்கைகளை அரசு மாற்றியது. மக்களால் அந்த வரி சுமையை சுமக்க முடியாது போனது. புலிகள்  இருக்கும் தருணத்தில்கூட புறக்கோட்டை கடைத் தொகுதிகள் மூடப்படவில்லை. ஆனால், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டதால் புறக்கோட்டை கடைத்தொகுதி ஒருநாள் மூடப்பட்டது. போராட்டத்தை முடக்குவதற்காக மூன்று கடைகளை அப்போதைய நிதி அமைச்சர் சீல் வைக்க நடவடிக்கையெடுத்திருந்தார்.



எமது அரசாங்கம் அமையப்பெற்றதும் சுங்க வரியை குறைக்க நடவடிக்கை எடுத்தது.தேசிய உற்பத்தியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு பல தீர்மானங்களை எடுத்திருந்தோம். தீர்வை வரியை குறைத்து செஸ் வரியின் மூலம் தேசிய உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துள்ளோம். உலக சனத்தொகையான 7.8 பில்லியனில் 128 மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 27 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியதர வருமானங்களை பெற்றவர்கள் 30 வருடங்களின் பின்னர் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக மாறியுள்ளனர். கொவிட் தொற்று உலகப் பொருளாதாரத்துக்கு   இரண்டாம் உலகப் போரைவிடவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



யுனிசெப்பின் அறிக்கையின் பிரகாரம் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை ஒடுக்கிய சிறந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது. ஜனாதிபதியின்  தலைமையின் கீழ் அரசு  பல்வேறு  சலுகைகளை மக்களுக்குப்   பெற்றுக்கொடுத்துள்ளது. வற் வரி குறைக்கப்பட்டதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டது. உழைப்புக்கான வரியையும் குறைத்துள்ளோம். அதேபோன்று வருமான வரி மற்றும் பொருட்களுக்கான வரியையும் குறைத்துள்ளோம். வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் அரச சேவையில் உள்வாங்கியுள்ளோம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

May02

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா

Jun12

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத

May24

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ

Jul26

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம

Oct25

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்

Feb10

இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு

Jun10

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்

Oct10

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்

Mar07

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு

Sep13

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத

Sep30

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்

Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Nov05

வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற