More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும் - கெஹெலிய ரம்புக்வெல்ல
மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும் - கெஹெலிய ரம்புக்வெல்ல
Mar 25
மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது. அத்தோடு தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல் தீர்க்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறி செயற்பட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,



மாகாணசபைத் தேர்தல் கடந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது. இது தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்களே இன்றும் தேர்தல் காலம் தாமதமடைவதற்கு காரணமாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி நாட்டின் அடிப்படை சட்டமாக மாகாணசபைகள் காணப்படுகின்றன.



இவற்றை மீறி செயற்பட அரசாங்கம் விரும்பவில்லை. அத்தோடு மாகாணசபைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக இதனை மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது.



தேர்தல் முறைமைகள் தொடர்பில் சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr22

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு

May21

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன

Sep27

தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக

Oct14

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக

Sep26

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக

Jul27

பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Jan23

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர

Feb15

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க

Sep21

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

May29

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற

Apr12

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத

Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா