More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
Apr 12
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த 9-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசினர்.



இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.



அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கெண்டதாகவும் அதில் கூறியிருந்தது.



இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.



சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகளின்படி, எல்லையில் பதற்றத்தணிப்பு தொடர்பான தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.



இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்துள்ள 11-வது சுற்று பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



ஏனெனில் சீன அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்ட மனநிலையிலேயே கலந்து கொண்டதாகவும், எந்த வகையிலான நெகிழ்வுத்தன்மையையும் அவர்கள் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

மியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து

Feb11

அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏ

Mar04

கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு

Sep24

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட

Jul17

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ

Feb07

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்

May21

நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன

Mar21

உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க

Jul17

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை

Mar15

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்

Jul14

பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல

Jul22

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்

Mar07

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா

Jun07

இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்

Mar07

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ