உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய்யை உற்பத்திசெய்யும் செம்பனை மரங்களைக் கட்டங்கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.