More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!
Apr 19
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.



வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,



கடந்த 70 நாட்களாக நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பத்தற்கு அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ முன்வரவுமில்லை ஆர்வம் காட்டவுமில்லை.



ஶ்ரீநகர் கிராமம் உருவாகி இந்த வருடத்துடன் 26 வருட காலம் கடந்தும் எமது மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கல், வீடு அற்றவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவி, சீரற்ற வீடுகளை திருத்தம் செய்ய நிதி உதவி, பொது நோக்கு மண்டபம் ,முன்பள்ளி கட்டமைப்பு போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.



குறித்த கோரிக்கைகளை முன் வைத்துகடந்த 70 நாட்களாக எமது கிராமத்தில் நாம் போராடி வருகின்றோம். இதனை நிறைவேற்றித்தருவதாக பிரதேச செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியதுடன், எமக்கு 14நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளில் முதற்கட்டமாக அலைகரைப்பகுதி காணிப்பிரச்சினை மற்றும் விளையாட்டு மைதானப் பிரச்சினைகளை முடித்துத் தருவதாக கூறினார். எனினும் இன்று 70 நாட்கள் ஆகியும் எமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ளோம்.



வவுனியா குளத்தினை நிரவி வியாபாரத்திற்காகவும், சுற்றுலாத்துறைக்காகவும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் 26 வருடங்களாக நிரந்தர வீடுகள் அமைத்து வசித்துவரும் எமக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு ஏன் அதிகாரிகள் பின்னடிக்கின்றார்கள். நாமும் இந்த மாவட்டத்தின் சாதாரண மக்களே. எனவே இதையும் அரச அதிகாரிகள் கண்டு கொள்ளாத பட்சத்தில் எமது போராட்ட வடிவத்தை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் என்றனர்



நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், ஶ்ரீநகர் மக்கள் மனிதர்கள் இல்லையா, காணி உறுதிபத்திரத்தை வழங்கு, 26 வருடங்களாக எம்மை ஏமாற்றுவது சரியா, நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்வு என்ன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்

Jan22

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ

Jun21

நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Aug12

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட

Jan19

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம

May01

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Apr17

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத

Jun01

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர

Jan30

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Oct03

இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க

Aug21

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட

Oct07

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க

Jun12

முதலாவது செய்தி

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட