More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!
கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!
Apr 16
கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 8 பேர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் வழியாக போதைப்பொருள் கடத்தி கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தை தடுக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு போதை பொருள் கடத்தி கொண்டுவரப்படுவதாக குஜராத் மாநில போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.



இந்த தகவலையடுத்து, அம்மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து அரபிக்கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, குஜராத்தின் ஜஹூவ் துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் 40 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு படகு வருவதை கடலோரக்காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த படகை சுற்றிவளைத்த படையினர் அந்த படகை நடுக்கடலில் மறித்து ஆய்வு செய்தனர். மேலும், அந்த படகில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த படகில் 30 கிலோ அளவிற்கு ஹேராயின் என்ற போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த படகு பாகிஸ்தானில் இருந்து வந்தது உறுதியானது. மேலும், பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருளை குஜராத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து, அந்த போதைப்பொருள், படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த படகில் பயணித்த பாகிஸ்தானியர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  



கைப்பற்றப்பட்ட 30 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 150 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ

Feb24

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்கள

Jul09

குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்

Oct10

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு

Mar26

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ

Apr03

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Apr19

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர

May28

சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப

Feb01

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின

Oct14

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Mar19

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாக

Feb23

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி

Mar27

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug20

ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 1