More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!
கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!
May 08
கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டி, வத்தளை, ஹேகித்தை மற்றும் பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், மாபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கெரங்ஹா பொக்குன, கல்லுடுபிட, மத்துமஹல ஆகிய கிராம சேவகர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



களுத்துறை வடக்கு காவல்துறை அதிகாரப் பிரிவின் வித்யாசார கிராம சேவகர் பிரிவிலுள்ள போசிறிபுர பகுதியும் மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



மத்துகமை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டதொலுவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதேவேளை, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.



இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மகரகமை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட அரவ்வல மேற்கும், பிலியந்தலை காவற்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட நிவந்திடிய மற்றும் மாம்பே கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



அதேநேரம், காலி மாவட்டத்தின் ஹபராதுவை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட கொக்கல – 1 மற்றும் 2, மீஹாகொட, மல்லியகொட, பியதிகம மேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங

Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு

May28

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி

Apr30

60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப

Sep19

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ

Mar10

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு

Oct20

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும

Feb07

சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ

Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Mar21

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச

Mar06

கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ

Apr02

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

May15

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக