More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
May 09
கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் இந்த ஆண்டும் பரோலில் உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.



இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரித்தது.



இதுதொடர்பான உத்தரவு நேற்று வெளியானது. அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-



கோர்ட்டுகளின் உத்தரவுப்படி ஏற்கனவே பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்



டெல்லி திகார் உள்ளிட்ட சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிடுவது போல, பிற மாநிலங்களும் அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.



சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளுக்கு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்தால் அவர்கள் வீடு சென்று சேர போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.



சிறையில் கொரோனா பரவலைத் தடுக்க அவ்வப்போது கைதிகளுக்கு மட்டுமின்றி, சிறை அதிகாரிகள், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சிறை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்



பரோலில் செல்ல விரும்பாத கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை சிறையில் செய்ய வேண்டும்.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விசாரணைக் கைதிகள், எந்த வகையிலான கைதிகளை நன்னடத்தை பரோல், இடைக்கால பரோல் ஆகியவற்றின் கீழ் விடுவிக்கலாம் என்பதை முடிவு செய்ய சட்டத்துறைச் செயலாளர், மாநில சட்ட உதவி ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர் அதிகார குழுவை அமைக்க மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Jul29

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா

Feb12

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின

Feb13

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்

Aug31

கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை

May29

சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந

Aug07