More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
May 26
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன.



பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நோயியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான லூக் மாண்டேக்னியர் கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்திடுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளுடன் லூக் நேர்காணல் வீடியோவும் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் லூக் பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை பற்றி கேள்வி எழுப்புகிறார். "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள், பெருந்தொற்று காலக்கில் தடுப்பூசி போடுவது நினைத்து பார்க்க முடியாத தவறு.



உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போட துவங்கியபின் உருமாறிய கொரோனா தீவிரம் அடைவதும், பெருந்தொற்று அதிகமாவது, மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இது பதிவாகும்," என அவர் கூறுகிறார். 



இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிர வைக்கும் நேர்காணலில், உலகின் முன்னணி நோயியல் வல்லுநர் இவ்வாறு கூறியிருக்கிறார். இனியும் நம்பிக்கையில்லை." எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்புகிறார். மேலும் இது மருத்துவ பிழை என குறிப்பிடுகிறார். எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை. 



போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்

Mar27

அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Mar11

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத

Feb14

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ

Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம

May23

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ

Feb02

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Jan28

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி

Jan24

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ