More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!
நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!
Jun 01
நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 20,440 வாகனங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 7,000 வாகனங்கள், உணவு வழங்கும் 4,760 வாகனங்கள், நோயாளிகளைக் கொண்டு செல்லும் 8,232 வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான 8,232 வாகனங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி 3,528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.



தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பயணக் கட்டுப்பாடுகளை மீறிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.



மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் தொடர்பில் இன்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படும், அத்துடன், முன்னுரிமை பெற்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.



இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளை விற்கும் வாகனங்கள் உப பாதைகளில் பயணிப்பதில்லை என்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தால் பிரதேச செயலாளர்களால் வழங்கப்படும் அத்தகைய விற்பனையாளர்களின் பயண அனுமதிகளை இரத்து செய்ய பொலிஸ்துறை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை

Jul13

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ

Jan13

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட

May25

 பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்

Aug13

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில

Apr22

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ

Oct26

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க

May02

புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர

Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

Oct25

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு

Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Oct03

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Jun08