More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டிய அதிகாரிகள்...
சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டிய அதிகாரிகள்...
Jun 03
சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டிய அதிகாரிகள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவுகளை வீடு வீடாக சென்று வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்ட போதும் பல்வேறு இடங்களிலும் மக்களை ஒன்று கூட்டி நிதி வழங்குகின்ற செயற்பாடுகளில் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்



இவ்வாறான நிலையில் நாடுபூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உர மானியங்கள் வழங்குவதற்காக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுகின்ற சந்தர்ப்பங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.



மக்களின் இவ்வாறான அசமந்த போக்கும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸினுடைய தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.



இவ்வாறான நிலைமையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவில் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக சுமார் 50 பேர் வரையில் ஒன்று கூடி இருந்த நிலையில் காவல்துறையினர் குறித்த மக்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததோடு குறித்து அதிகாரிகளின் உயர் அதிகாரியான பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பிரதேச செயலாளர் குறித்து அதிகாரிகளுக்கு வீடு வீடாக சென்று பணத்தை வழங்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Oct26

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க

Apr30

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள

Aug31

அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்

Mar04

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத

Mar13

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர

Sep20

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்

Mar05

பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்

Aug07

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்

Sep15

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந

Jul25

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந