More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதி தேவையில்லை!
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதி தேவையில்லை!
May 30
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதி தேவையில்லை!

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது பிற வாகனத்திலோ கொண்டு செல்ல முடியும்."



இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,



"நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனையின் பிரகாரம் பயணத்தடையை தளர்த்தாது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுமானால் 8ஆம் திகதிக்கு பின்னர் கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்குச் செல்லக்கூடியதாக இருக்கும். நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமெனில் எந்தவொரு அனுமதியும் தேவையில்லை.



இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும். வாகனங்கள்மூலம் (டிலிவரி சேவை) நடமாடும் சேவைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.



டிலிவரி சேவையை முன்னெடுப்பதற்கு 31ஆம் திகதிவரை வழங்கப்பட்ட அனுமதி ஜுன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனைப் புதுப்பிக்கவேண்டியதில்லை.



பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டல் அறிக்கையை ‘டிலிவரி’ செய்வதற்கு புத்தக விற்பனை நிலையம் முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும்" - என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு

Mar03

நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா

Oct05

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  (PUCSL)  இன்று 2 மணி

Jan26

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப

Sep21

பண்டாரவளை பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொ

Sep29

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியி

Oct04

சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Mar29

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த

Apr04

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ

Feb06

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ

Sep24

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந

Mar08

கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா