More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
Jun 10
கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.





விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.





இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.





மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.





தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.





மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.





சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.





இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துகளுக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்துகளில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.





மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்

Mar27

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ

May25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

May18

எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்

Aug29

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ

Sep17

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Feb09

சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு

Mar23

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ

Oct11

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,