மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்தார்.
சிரேஷ்டகாவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கா வின் ஆலோசனைக்கமைய சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்காக அதில் ஈடுபடுவேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை ஒன்று மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தலைமையிலான காவற்துறை குழுவினர் இன்று அதிகாலை மரப்பாலம் ஆற்று பகுதியினை சுற்றிவளைத்தனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஆற்றில் இருந்து உழவு இயந்திரத்தில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கரடியனாறு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

