More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு – இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் வெளியாகியது தகவல்
பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு – இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் வெளியாகியது தகவல்
Jun 19
பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு – இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் வெளியாகியது தகவல்

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் திரும்பியதும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சு நடைபெறும் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே முன்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியத் தூதுவருடான சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பஸில் ராஜபக்சவையும் வைத்துக்கொண்டு எங்களுடன் பேச்சு நடத்த விரும்புகின்றார் என்று தெரியவருகின்றது. அதனாலேயே அவருடனான சந்திப்பை இறுதி நேரத்தில் ஒத்திவைத்துள்ளார். பஸில் ராஜபக்ச வந்ததும் மீண்டும் பேச்சு நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்த விடயத்தை இந்தியத் தூதுவர் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் கொரோனாத் தடுப்பூசிகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது.



வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளனவே என்று குறிப்பிட்டுள்ளார். அது போதாது என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் அதிகளவான தடுப்பூசிகள் தேவை என்று வலியுறுத்தினர்.



இதன்போது இந்தியத் தூதுவர், தமது நாட்டில் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது எனவும், உற்பத்தி குறைவாக உள்ளது எனவும், அதனால் இப்போது வழங்க முடியாத சூழல் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



இந்தப் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் இலங்கைக்கு மாத்திரமல்ல ஏனைய நாடுகளுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை இந்தியா வழங்கும் எனவும் தூதுவர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct14

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்

Mar28

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Apr01

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ

May03

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி

Jan26

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ

Feb03

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன

Sep27

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ

Jan22

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ

Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Feb06

சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Apr01

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்