More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!
அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!
Jun 16
அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய சுற்றிவளைப்பு ஒன்றினை இராணுவ மோட்டார் படையணியின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து இருந்தனர்.



இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காது வீதிகளில் சுற்றித்திரிந்த நபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.



இதேவேளை விநாயகபுரம் கடற்கரை வீதியில் காட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்த கும்பல் ஒன்றினையும் இராணுவ மோட்டார் சைக்கில் படையணியின் உதவியுடன் திருக்கோவில் காவற்துறையினர் கைது செய்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இவ் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்குபடுத்தலில் கீழ் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில்காவல் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணியினர் திருக்கோவில் பிரதேச கொவிட் தடுப்பு செயலணியின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் திடிர் சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க

Mar18

கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா

Apr04

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க

Sep26

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்ன

Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட

Oct15

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

Sep21

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா

May20

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

May26

நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்

Jul04

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி

Mar07

கிளிநொச்சி

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

Jan25

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல