More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? - நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? - நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
Jun 22
கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? - நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதிபடக் கூறமுடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



கொரோனாவை பொறுத்தவரை ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா நேற்று கடந்தது. அதாவது, தொடர்ந்து 14-வது நாளாக நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் இருந்தது. ஒரு பகுதியில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள தேவையை இது பூர்த்தி செய்வதாக உள்ளது.



மேலும் 88 நாட்களில் மிகவும் குறைவாக தொற்று எண்ணிக்கை 53 ஆயிரத்து 256 ஆக சரிந்துள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 3.83 சதவீதமாக குறைந்துள்ளது.



இதெல்லாம், கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டது, மேலும் பல தளர்வுகளை அறிவிக்கலாமே என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.



ஆனால் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷப்பட்டு இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப அவசரப்படக் கூடாது, பொறுமையான கவனம் அவசியம் என்று எச்சரிக்கிறார்கள், நிபுணர்கள்.

டெல்லி சிவநாடார் பல்கலைக்கழக இயற்கை அறிவியல் துறை இணை பேராசிரியர் நாகா சுரேஷ் வீரப்பு, ‘கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ள விதத்தில், 2-வது அலை உச்சத்தைத் தொட்ட அதேவேகத்தில் மறைந்துவருகிறது. ஆனால் அது இன்னும் முடிவை எட்டவில்லை. அதிகம் பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் போன்றவை தோன்றியிருக்கின்றன’ என்கிறார். அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரியில், கொரோனா முதலாவது அலை முடிந்ததைக் கொண்டாடிய நாடு, 2-வது அலை வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டது’ என்றார்.



‘புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது’ என்று பொதுக்கொள்கை நிபுணர் சந்திரகாந்த் லகாரியா கூறுகிறார்.



அவர் கூறுவதை ஆமோதிக்கும் விஞ்ஞானி கவுதம் மேனன், ‘கேரளா போன்ற மாநிலங்களில் இன்னும் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாகத்தான் இருக்கிறது.’ என்கிறார்.



இப்போதைக்கு, அச்சத்துடன் எதிர்நோக்கப்படும் கொரோனா 3-வது அலையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் சுரேஷ் வீரப்பு சொல்லி முடிக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க

Dec28

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம

Jul19

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட

Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப

Sep23

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல

Mar15

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை

Feb01

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள

Jul27

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக

Apr08

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க

Jun16

கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

Feb23

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான

Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Feb20

சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க

Feb08

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்