More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!
Jul 03
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது 2001-ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டப்பட்டனர்.



ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதையடுத்து நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.



இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன் கூறும்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார்.



இப்பணி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இந்த விமானப்படை தளம் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.



20 ஆண்டுகளுக்குபிறகு அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளன. இதனால் சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறலாம் என்று தகவல் வெளியானது.



இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜன்சாகி கூறியதாவது:-



ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நேட்டோ படையினர் வெளியேறினர். அமெரிக்க படைகள் முழுமையாக ஆகஸ்டு மாத இறுதியில் வெளியேறும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க

Sep15

பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்

May03

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க

May27

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்

Oct04

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க

Jun03

இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப

Mar01

சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

Sep17

சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி

Jul21

மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட

Mar26

உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுக

Aug23

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில

Apr25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர

Mar08

உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட