More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா குற்றச்சாட்டு!
அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா குற்றச்சாட்டு!
Jul 15
அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா குற்றச்சாட்டு!

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் குறுகிய நோக்கம்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களை வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி.



இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-



“தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனிமைப்படுத்தல் எவர் மீறினாலும் தராதரம் பாராது அவர்களுக்கு எதிராகப் காவற்துறையினர் சட்டத்தைச் செயற்படுத்துவார்கள்.



ஆசிரியர் சங்கத்தின் பிரதானியே வீதியில் இறங்கி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும்போது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு எவ்வாறு பணிப்புரை விடுப்பது?



அரசியல் கட்சிகளின் தேவைக்காக, அக்கட்சிகளின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் குறுகிய நோக்கம் கொண்ட குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நிறுத்துமாறு கோருகின்றோம்” – என்றார்.



ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பலவந்த தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



இதனைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த

Feb03

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக

Oct01

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத

Jan28

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற

Feb21

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா

Jan29

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க

Sep22

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு

Mar08

இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Oct02

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

Oct08

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும