More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
Jul 17
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ, அதேபோன்று எனக்கும் பெருமையாக இருக்கிறது.



நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடு தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மக்களுடைய நம்பிக்கையும் அது தான்.



உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.



இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ளவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.



விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். விளையாட்டு போட்டிகளில் பெண்கள் அதிக ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார்கள். அவர்களுக்கான முழு உதவியையும் இந்த அரசு செய்யும்.



ஆண் வீரர்களுக்கு பொருளாதார தடை மட்டும்தான் இருக்கும். பெண் வீரர்களுக்கு அத்தோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக இருக்கும். இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சிபெற நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களது திறமையைத் தமிழ்நாடு அரசு மெச்சுகிறது.



அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும் என்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள

Oct01

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக

Jul15

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் 

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Jun18

இந்தியாவில 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம

Jul24

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ

Sep20

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்

Jul07
May13

இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர

Jun11

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo

Jul11

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ

Mar10

பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி

May04

வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி

Jun18

கர்நாடக துணை முதல்-மந்திரி