வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று (23.07.2021) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

