More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தான் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!
ஆப்கானிஸ்தான் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!
Jul 25
ஆப்கானிஸ்தான் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் உள்நாட்டு போர் நடக்கிறது.



இதில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன. ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் அனைத்துப் படையினரும் வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் அங்கு தலிபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள தலிபான்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.



இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தலிபான்களின் தற்போதைய தாக்குதல் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்கான தங்களின் கூற்றுக்கு முரணானது என இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.



அதையடுத்து, ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என அஷ்ரப் கனியிடம் அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்தார்.



இதுதொடர்பாக அதிபர் அஷ்ரப் கனி கூறுகையில், ‘‘அதிபர் ஜோ பைடன் உடனான தொலைபேசி உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் தொடர்ச்சியான உறவை பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தொடரும் என அதிபர் ஜோ பைடன் எனக்கு உறுதியளித்தார். அவர்கள் ஆப்கானிஸ்தானை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி

Jun02

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு

May01

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக

Jul03

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு

Mar13

 உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே

Sep21

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக

Apr05

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம

Feb22

உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்

Feb28

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைர

May11

கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப

Mar27

ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் ப

May17

 உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச

Feb07

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா

Jun09

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச