More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா இறப்பு பதிவிடுவதில் குறைபாடா?- மத்திய அரசு விளக்கம்...
கொரோனா இறப்பு பதிவிடுவதில் குறைபாடா?- மத்திய அரசு விளக்கம்...
Aug 05
கொரோனா இறப்பு பதிவிடுவதில் குறைபாடா?- மத்திய அரசு விளக்கம்...

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இறப்பு தொடர்பான அரசின் புள்ளிவிவரம் சரியானதுதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.



இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-



கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது சுகாதார அமைப்புகள் நாடெங்கும் திறமையான மருத்துவ மேலாண்மையில் கவனம் செலுத்தின. இதன் காரணமாக பாதிப்புகளை சரியாக அறிக்கையிடுவதிலும், இறப்புகளை பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படலாம். ஆனால் விடுபட்ட கணக்குகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பின்னர் சரிசெய்து விடுகின்றன.



8 மாநிலங்களில் இறப்புகளை குறைத்து அறிக்கையிட்டிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இறப்புகளை மதிப்பிட முடியும். இருப்பினும் சரியான தரவு ஒருபோதும் அறியப்படாது. சிவில் பதிவு முறையில், சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பில் எல்லா வகையிலான இறப்பும் பதிவாகிறது.



கொரோனா இறப்புகள் பதிவு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.



மாவட்ட அளவிலான, தேதிவாரியான விவரங்களுடன் தவற விடப்பட்ட இறப்புகளை தெரிவிக்கவும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.



மேலும் சட்ட அடிப்படையிலான அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பதிவு செய்யப்படுவதை சிவில் பதிவு அமைப்பு உறுதி செய்கிறது.



எனவே கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் போகலாம். இறப்பைப் பொறுத்தமட்டில் முற்றிலும் பதிவு தவறுவதற்கான வாய்ப்பு இல்லை.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug15

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்

May26

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த

Feb10

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல

Aug22

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Sep27

தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா

Feb11

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Feb24

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப

Sep28

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள

May14

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

Jan17

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும

Sep16

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்