அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆசி யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த மக்கள் ஆசி யாத்திரையில் 2 ஆம் நாள் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய ராதாகிருஷ்ணன் , தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது. அந்த நாள் தமிழகத்தில் வரப்போகிறது என்பதற்காகத்தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அழகிரியும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் என்றார்.